கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி

Update: 2022-09-27 12:42 GMT
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பின்புறம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்வதற்காக தார் சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் சாலை போடப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக அலுவலகத்திற்கு செல்லும் அலுவலர்கள், ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்