பல்லாங்குழி சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

Update: 2022-09-27 11:33 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே வீரானந்தபுரத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பல்லாங்குழி சாலையால் சரியாக வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். இதனால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. ஆகவே பல்லாங்குழி போல் காணப்படும் சாலையை சீரமைமக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்