ஊட்டியை அடுத்த மஞ்சூரில் பஜார் பகுதியில் சாலையின் இருபுறமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையின் ஒருபுறம் மட்டும் வாகனங்களை நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.