பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை வேதநதி ஆற்றுப்பாலம் அருகே குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இதே சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் எதிரில் சாலையின் குறுக்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இந்த சாலையில் உள்ள பள்ளத்தை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.