வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசப்படுமா?

Update: 2022-09-16 11:56 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளில் உள்ள சாலைகளின் பிரிவு மற்றும் வளைவு பகுதிகளில் விபத்துகளை தடுப்பதற்காக ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த வேகத்தடை சரிவர தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் வேகத்தடையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக கீழே விழும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் இருப்பதை அனைவரும் அறியும் வகையில் வேகத்தடையின் மேல் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்