ஏரிக்கரைக்கு சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-14 14:19 GMT
பெரம்பலூர் மாவட்டம், எசனை ஏரிக்கரை பாதை மோசமாக காட்சியளிக்கிறது. மேலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால் அந்த வழியாக விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரையில் முட்புதர்களை அகற்றி புதியதாக தார் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்