பொதுமக்கள் அவதி

Update: 2022-09-06 15:17 GMT

விருதுநகர் அருகே சின்னவள்ளிகுளம் கிராமத்தில் இருந்து ரோசல்பட்டி செல்லக்கூடிய சாலை முற்றிலும் சேதமடைந்து கற்குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அல்லல்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்