நடவடிக்கை தேவை

Update: 2022-09-01 15:55 GMT

விருதுநகர் டி.டி.கே. சாலையில் தார் சாலையின் உயரத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை மூடியினை உயர்த்தி அமைக்காததால் அந்த பகுதி மட்டும் பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்தப்பள்ளத்தில் வாகனத்தை இறக்கி ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சாலையின் உயரத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை மூடியினையும் உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்