புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-08-29 15:55 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, முகமதுபட்டினம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள தார் சாலையான தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயகற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர். மேலும் அந்தப்பகுதியில் இரவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குழிகளில் மழைநீர் தேங்கி குட்டை போலும் சேறு, சகதியுமாக காட்சியளிக்கிறது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளோம்.

மேலும் செய்திகள்