பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மற்றும் காய்கறி வாங்கி செல்லும் பொதுமக்கள் அந்த சாலை வழியாக மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.