விருதுநகர் மெயின் பஜாரில் இயங்கி வரும்பள்ளி நுழைவுவாயில் பகுதியில் மழை காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழைநீரால் மாணவர்கள் அவதியடைகின்றனர். மேலும் கழிவுநீரில் நடப்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
