விருதுநகர் அருகே உள்ள பொட்டல்பட்டியில் தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். குண்டும், குழியுமான சாலையால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.