வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த தேன்பள்ளி காலனியில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு மத்தியில் மழைநீர் தேங்குவதால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. தெருவில் தேங்கியிருக்கும் மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையேல், எங்கள் தெருவில் வடிகால்வாய் கட்டித்தர வேண்டும்.
-உதயராஜா, தேன்பள்ளி.