வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

Update: 2026-06-28 17:26 GMT

ஆரணி நகர மையத்தில் தாலுகா அலுவலகம் எதிரே அமைந்துள்ள கோட்டை மைதானத்தில் உடல் ஆரோக்கியத்துக்காக காலை, மாலை இருவேளை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக வரக்கூடிய பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் அனைவரும் நுழைவு வாயில் முன்பாக தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் அவர்கள் உள்ளே சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே தனியாக வாகன நிறுத்துமிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தால் வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவீந்திரன், ஆரணி.

மேலும் செய்திகள்