ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலைப்பட்டி அருந்ததியர் காலனியில் உள்ள சுகாதார வளாகம் கடந்த ஒரு மாதமாக பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே கழிப்பறையை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.