மணலூர்பேட்டை அடுத்த கூவனூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு போதிய பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை கரும்பு, நெல் உள்ளிட்ட விளைச்சல் நிலங்கள் வழியாக அப்பகுதி மக்கள் கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது. அவ்வாறு செல்லும்போது விஷ பூச்சிகள் கடித்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே விரைந்து சுடுகாட்டிற்கு பாதைவசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.