தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அறிஞர் அண்ணா பஸ் நிலையம் செல்லும் நுழைவுவாயிலின் நடுவில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மின்கம்பத்தில் ேமாதினால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.