கொல்லிமலையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் ஒரு தம்பதியினர் சிறுவனை மலைக்குச் செல்லும் 33-வது கொண்டை ஊசி வளைவு தடுப்புச்சுவர் மீது நிற்க வைத்து செல்போனில் படம் பிடித்தனர். மேலும் சிலர் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுக்கின்றனர். எனவே கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவரில் நிற்க வைத்து படம் எடுப்பதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.