திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டை பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்த செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.