நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிரே நெடுஞ்சாலையோரம் ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் தற்போது இலைகள் உதிர்ந்து பட்டுபோய் காட்சியளிக்கின்றது. இதனால் இந்த ஆலமரம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு ்நிகழ்ந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்து உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள ஆலமரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.