நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.வாழவந்தி பகுதியில் மயானத்திற்கு பாதை செல்கிறது. இந்த பாதையில் சாலையோரம் செல்லும் மின் ஒயர்கள் சீமை கருவேல மரங்களை ஆக்கிரமித்துள்ளது. இதனால் காற்று அடிக்கும்போது சீமை கருவேல மரங்கள் மின் ஒயர்கள் மீது உரசுகிறது. அப்போது தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் ஒயர்களின் மேலே சென்ற சீமை கருவேல மரக்கிளை சாலை பணியாளர்கள் வெட்டினர். ஆனால், முழுமையாக வெட்டி அகற்றவில்லை. இதனால் சீமை கருவேல மரங்கள் மீண்டும் வளர்ந்துவிட்டன. எனவே சாலை மற்றும் மின் ஒயர்களை ஆக்கிரமித்து உள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.