பள்ளி சுற்றுச்சுவரில் செடி-கொடிகள்

Update: 2026-02-15 11:37 GMT

திருப்பூா் மாநகர பகுதியில் உள்ள பூலுவப்பட்டி அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை ஆக்கிரமித்தவாறு செடி-கொடிகளுடன் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சுற்றுச்சுவர் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் விஷப்பூச்சிகளின் கூடாராகும் நிலையும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளிக்கூட சுவரின் அருகே உள்ள செடி-கொடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

செந்தில், திருப்பூர்.

மேலும் செய்திகள்