பள்ளிபாளையம், வெப்படை ஆகிய பகுதிகளில் முக்கிய வீதிகள், சாலைகளில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. நாய்க்கடியால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பார்களா?