குரங்குகள் தொல்லை

Update: 2026-01-18 11:28 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் சித்தன்னவாசல் கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை வழிப்பறி கொள்ளையர்கள் போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அச்சுறுத்தி கையில் உள்ள பொருட்களை பிடுங்கி செல்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்