‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-01-18 10:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பஸ் போக்குவரத்து கழகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சி பஸ் இரவு 9 மணி அளவில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால் வேலை காரணமாக வெளியூர் செல்லும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் தங்களின் வீட்டிற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொன்னமராவதி டிப்போவில் இருந்த கேசராபட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சிக்கு இரவு 9 மணிக்கு பஸ் இயக்குகின்றனர். எனவே இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்