பஸ் இயக்க கோரிக்கை

Update: 2025-12-14 11:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி டிப்போவில் இருந்து கேசராபட்டி, உலகம்பட்டி, கரிசல்பட்டி வழியாக துவரங்குறிச்சி வழித்தடத்தில் இரவு 9 மணிக்கு பஸ் சேவை இயக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த பஸ் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கேசராபட்டி, உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் முறையான போக்குவரத்து வசதியின்றி சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்