கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்துக்கிடக்கும் பயணிகள் கால் கடுக்க காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் கடும் சிரமமடைகின்றனர். எனவே பயணிகள் நலன்கருதி, சேதமடைந்த இருக்கைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.