புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி காந்தி பூங்கா அருகே மாவட்ட நீதி துறை நடுவர் நீதி மன்றம் மற்றும் வட்டார கிளை நூலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. நீதி மன்றம் மற்றும் நூலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் போதிய கழிவறை இல்லாததால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும அவதியடைந்து வருகின்றனர். காந்தி பூங்காவில் ஒரு கழிவறை கட்டப்பட்ட நிலையில், இன்னும் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவில்லை. எனவே பயன்பாட்டில் இல்லாத அந்த கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.