குரங்குகள் தொல்லை

Update: 2025-11-09 11:10 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள இலுப்பக்குடிப்பட்டி, ஒடுக்கூர் கிராமங்களில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பண்டங்களை எடுத்துச் செல்கின்றன. மேலும் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்