கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவைகள் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் விரட்டி வருபவர்களை கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.