பயணிகள் அவதி

Update: 2025-10-19 10:38 GMT

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு வெளியூர் செல்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் பயன்பாட்டுக்காக பஸ் நிலையம் பகுதியில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கழிவறை முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இயற்கை உபாதை கழிக்க பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்