செஞ்சி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி பழுதடைந்து நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் தனியார் மையத்திற்கு சென்று அதிக பணம் கொடுத்து எக்ஸ்ரே எடுத்துவரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து எக்ஸ்ரே கருவியை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?