தெருநாய் தொல்லை

Update: 2025-09-14 14:44 GMT

சேலம் சங்கர் நகர், மேயர் நகர், ராஜாராம் நகர் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் அந்த வழியாக செல்வோரை கடிக்க துரத்துகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சாலைகளில் செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு பணி முடிந்து வாகனங்களில் வீட்டிற்கு செல்பவர்களை அவைகள் துரத்துகின்றன. அப்போது அவர்கள் வாகனங்களில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

கனகதாசன், ராஜாராம் நகர், சேலம்.

மேலும் செய்திகள்