திருச்சி மாவட்டம் தொட்டியம் கொளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி முன்புறம் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயனிகள் நிழற்குடை மற்றும் பள்ளியின் மதில் சுவர் பகுதிகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் இந்த பஸ் நிறுத்தத்திற்கு பஸ் ஏர வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.