உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியை நவீன வசதியுடன் விரிவாக்கம் செய்து புதிய கட்டிடம் கட்டி பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் திறப்பு விழா நடத்தாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் சிரமம் அடைகின்றனர். எனவே அரசு ஆஸ்பத்திரியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.