புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ஒடுக்கூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்கள், பாத்திரங்களை தூக்கி செல்கின்றன. அதேபோல் கடைகளில் தொங்கவிடப்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொத்தாக அள்ளி செல்கின்றன. எனவே பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.