அங்கன்வாடி கட்டிடம் பயண்பாட்டிற்கு வருமா?

Update: 2025-08-24 12:22 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் கொப்பம்பட்டி ஊராட்சி அருந்ததியர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.2 லட்சம் செலவில் கதவு, ஜன்னல் மற்றும் கைப்பிடி அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் நிறைவடைந்தும் கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்