திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புற நோயாளிகள் பிரிவு தரைத்தளத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்தும், உடைந்தும் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் கால்களை பதம் பார்த்து விடுகின்றன. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரைத்தளத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.