சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க பாய்கிறது. இதனால் அடிக்கடி வாகனஓட்டிகள் விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.