செஞ்சி அருகே சத்தியமங்கலம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செஞ்சிக்கோட்டை செல்வதற்கான வழியை காட்டும் வகையில் அங்கு பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த பலகை சமீபத்தில் கீழே விழுந்துள்ளதால் வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் எப்படி செல்ல வேண்டும் என்று வழி தெரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். எனவே மீண்டும் அப்பகுதியில் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.