கள்ளக்குறிச்சி அருகே நிறைமதி கிராமத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து காணப்படுகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கிறது. மேலும் அவைகளை விரட்டும் பொதுமக்களை குரங்குகள் கடிக்கப் பாய்கிறது. எனவே அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.