மயான கொட்டகை தேவை

Update: 2025-06-29 12:50 GMT

திருவோணம் சிவவிடுதி அருகே பில்லக்குறிச்சி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மயான கொட்டகை இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை மழையிலும், வெயிலிலும் வைத்து இறுதி சடங்குகளை செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மயான கொட்டமகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்