கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2025-06-22 15:48 GMT
சிதம்பரம்- காட்டுமன்னார்கோவில் சாலையில் இருந்து டி.நெடுஞ்சேரி செல்லும் சாலையில் இருபுறமும் கருவேலமரங்கள் வளர்ந்து சாலையை மறைத்துள்ளது. மேலும் சாலையோரம் பள்ளமாக இருப்பதால் அவ்வழியாக கனரக வாகனங்கள் வரும்போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் வழிவிட்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையோர கருவேல மரங்களை அகற்றி, பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்