மதுபிரியர்கள் தொல்லை

Update: 2025-06-22 15:20 GMT

ஊத்தங்கரைக்கு அருகே நாகப்பேராம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் தினமும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு அந்த வழியாக செல்லும் பெண்களிடம் கலாட்டா செய்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி போலீசார் இரும்புக் கரங்கள் கொண்டு இந்த மதுபிரியர்களின் தொல்லையை ஒடுக்க வேண்டும்.

-ஆர்.காமராஜ், நாகப்பேராம்பட்டி.

மேலும் செய்திகள்