திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. சில மருத்துவ பிரிவுகளில் நோயாளிகள் அமர இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.