கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலை வடபொன்பரப்பி கால்நடை மருத்துவமனை அருகே சாலையோரத்தில் காய்ந்த மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அந்த காய்ந்த மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.