காஞ்சீபுரம் கிழக்கு ராஜ வீதி பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.