புதிய மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-06-01 19:57 GMT

மேட்டூர் நகராட்சி பஸ் நிலையம் அருகே நான்கு ரோடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் இரவில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவில் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பழுதான மின்விளக்குகளை அகற்றிவிட்டு புதிய மின்விளக்குகள் பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிகுமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்