செஞ்சி காந்தி கடை வீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்துள்ளனர். இதனால் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.