திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் ஓடும் அய்யாற்றின் நீர் வழித்தடங்களில் கோரை புற்களும், நாணல்களும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நீரோட்டம் குறைவதுடன், நீர் வழித்தடங்களில் பாம்புகள், விஷப்பூச்சிகள் பெருகுவதால், நீரோட்டங்களில் குளிக்கும் பொதுமக்கள், சிறுவர்- சிறுமிகள் விஷ ஜந்துகளால் தீண்டப்பட்டு பெரும் அவதிக்குள்ளாக வேண்டி இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அய்யாற்றின் நீர்வழிப்பாதைகளை சுத்தப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.